அழகு..அழகு..புதியவை

முகத்துல இருக்கிற கரும்புள்ளி மறையவே மாட்டேங்குதா?… இத மட்டும் ஒருவாரம் பண்ணுங்க… காணாம போயிடும்…

முகத்தில் ஏற்படும் பிளாக்ஹெட்ஸால், பொது இடங்களில் நமது அழகு, அந்தஸ்து உள்ளிட்டவை பெருமளவு பாதிக்கப்படுகிறது. வீடுகளிலேயே மேற்கொள்ளும் எளிய வழிமுறைகளால், பிளாக்ஹெட்ஸை நாம் எளிதாக மட்டுமல்லாது துரிதமாக விரட்டலாம். இதற்காக தோல் சிகிச்சை மருத்துவர்கள் 8 விதமான வழிமுறைகளை பரிந்துரை செய்துள்ளனர். இந்த 8 வழிமுறைகளை ஒன்றன்பின் ஒன்றாக செய்தால் பிளக்ஹெட்ஸை விரட்டலாம் என கூறியுள்ளனர். இது பற்றி முழுமையாக இங்கே காணலாம் வாருங்கள்.

முகத்தின் அழகை கெடுக்கும் பிளாக்ஹெட்ஸில் இருந்து விடுபடுவது என்பது ராக்கெட் விஞ்ஞானம் இல்லை என்றாலும், இந்த கறைகளினால், நமது முகத்திற்கு ஏற்படும் இழப்பை சொல்லி மாள முடியாது. பிளாக்ஹெட்ஸ் என்பது, ஒருவகையான முகப்பரு தான் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். எண்ணெய் சருமம் உள்ளவர்களே, இந்த பிளாக்ஹெட்ஸ் வகையிலான முகப்பருக்களால் அதிகமாக அவதிப்படுகின்றனர்.

​கரும்புள்ளிகள்

பிளாக்ஹெட்ஸ் என்பது கன்னங்கள், நெற்றிப்பகுதி மற்றும் மூக்கின் அடிப்பகுதியில் காணப்படும் சிறிய கருப்பு புள்ளிகள் ஆகும். பருவம் அடைதல் மற்றும் பிரசவ காலங்களின் போது உடலினுள் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களினால், இந்த பிளாக்ஹெட்ஸ் தோன்றுகிறது எனத் தெரிவித்துள்ளனர். மாதவிடாய் சுழற்சி காலங்களில் நீங்கள் இருக்கும்போது, உங்களது முகத்தில் அதிகளவில் பிளாக்ஹெட்ஸ் தோன்றுவதை நீங்கள் கண்கூடாக காண முடியும்.

ஆண்ட்ரோஜன் என்ற முக்கிய ஹார்மோனே, பிளாக்ஹெட்ஸ் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது. இந்த ஹார்மோன்கள், செபேசியஸ் சுரப்பியை தூண்டி, முகத்தில் அதிக எண்ணெயை உற்பத்தி செய்வதோடு சருமத்தை பிசுபிசுத் தன்மையுடன் இருக்க உதவுகிறது. முகத்தில் உள்ள மயிர்க்காலின் திறப்பானது, இறந்த செல்கள் மற்றும் ஒட்டும் தன்மையுள்ள பிசுபிசுப்பான சருமத்தால் அடைக்கப்பட்டு உள்ளது. இந்த துளை மீது காற்று படும்போது, அது ஆக்சிஜனேற்றம் அடைந்து,கரும்புள்ளியாக மாறுகிறது.

​பிளாக்ஹெட்ஸால் தோலுக்கு என்ன பாதிப்புகள்?

முகத்தில் உள்ள கருப்பு புள்ளிகள், முகத்தோலில் உள்ள துளைகளை நிரந்தரமாக பெரியதாக்க பயன்படுகிறது. இந்த மாதிரியான கரும்புள்ளிகள் நீண்ட காலம் இருப்பதால், அது நமது முகத்தின் அழகை கெடுக்கவல்லதாக அமைந்து விடுகிறது. இந்த கரும்புள்ளியை சுற்றியுள்ள தோல், அதன் நெகிழ்வுத்தன்மையை இழக்கிறது. நீங்கள் சிகிச்சையின் உதவியால் கரும்புள்ளிகளை நீக்கும்போதும், அந்த துளை விரிவடைகிறது. இதை நீங்கள் அலட்சியப்படுத்தும் பட்சத்தில், மோசமான முகப்பரு ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அடைபட்ட துளைகளில், பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிரிகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் உண்டாகும். முகப்பருக்களை உண்டாக்கும் பாக்டீரியா, எரிச்சலை ஏற்படுத்தி,துளைகளில் மேலும் பாதிப்பை அதிகப்படுத்தும்.

​இரட்டை சுத்தம்

முகத்தில் கரும்புள்ளி உள்ளவர்கள், பின்பற்ற வேண்டிய முதல் தோல் பராமரிப்பு பழக்கம், தோலில் உள்ள நீர் மற்றும் எண்ணெயில் கரையக் கூடிய அசுத்தங்களை அகற்ற இந்த இரட்டை சுத்தம் செய்ய வேண்டும். எண்ணெய் சருமம் மற்றும் முகப்பருக்கள் உள்ளவர்களுக்கு, இரட்டை சுத்த முறை எளிய முறை ஆகும். முதலில் உங்கள் முகத்தை மைக்கேலர் நீரால் சுத்தம் செய்ய வேண்டும். பின் இந்த நீரால் நனைத்த காட்டன் பஞ்சைக் கொண்டு முகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சீராக மசாஜ் செய்ய வேண்டும். பின் ஜெல் கொண்டு தயாரிக்கப்பட்ட நுரைக்கும் தன்மை கொண்ட கிளின்சரைக் கொண்டு கழுவ வேண்டும். பின், சுத்தமான துணியை கொண்டு முகத்தை துடைக்க வேண்டும்.

​நீராவி சிகிச்சை (ஸ்டீம்)

முகத்தில் ஏற்பட்டுள்ள கரும்புள்ளிகளை அகற்ற நீராவி சிகிச்சை(ஸ்டீம்) மேற்கொள்வது மிகவும் பிரபலமான வழிமுறை ஆகும். இந்த சிகிச்சை முறையால், தோலில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்படுவதோடு, சருமத்தில் உள்ள பிசுபிசுப்பும் நீக்கப்படுகிறது.

முகத்தை டபுள் கிளன்சிங் சுத்தம் செய்து முடித்தபிறகு, நீராவி சிகிச்சையை 10 நிமிடங்கள் மேற்கொள்ள வேண்டும். பின், ஐஸ் கட்டியை கொண்டு முகத்தில் நன்கு தடவ வேண்டும். பின் முகத்தை உலரவிட வேண்டும்.

​கரும்புள்ளிகளை நீக்கும் ஸ்டிரிப்ஸ்

துளைகளை மூடும் வகையிலான ஸ்டிரிப்ஸ் முகத்தில் புதிதாக தோன்றும் கரும்புள்ளிகளை நீக்க பயன்படுகிறது. இந்த ஸ்டிரிப்களை தொடர்ந்து பயன்படுத்தி வருவதன் மூலம், கரும்புள்ளிகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். வெதுவெதுப்பான நீரில் குளித்துவிட்டு, இந்த ஸ்டிரிப்களை பயன்படுத்திக் கொள்ளலாம். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவதற்கு, இரட்டை சுத்தம், நீராவி (ஸ்டீம்) சிகிச்சையை தொடர்ந்து இந்த ஸ்டிரிப்களை பயன்படுத்தலாம்.

​பென்டோனைட் கிளே

பென்டோனைட் கிளே, இந்தியாவில் கிளே அழகிற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எரிமலை சாம்பலில் இருந்து பெறப்படும் இந்த கிளே, கால்சியம், மெக்னீசியம் உள்ளிட்ட மினரல்கள் அதிகளவில் உள்ளன. உடலுக்கு போதை ஏற்படுத்தும் பொருளாக இந்த பென்டோனைட் கிளே பயன்படுத்தப்படுகிறது.

ஒரு தேக்கரண்டி பென்டோனைட் கிளே உடன், சிறிதளவு ஆப்பிள் சிடார் வினிகர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை, முகத்தில் சீராக தடவி 15 நிமிடங்கள் காத்திருந்து பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகளை இந்த பென்டோனைட் கிளே அகற்றும். இந்த கிளேக்கு ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகள் உள்ளது.

​நியாசினமைட் சீரம்

வைட்டமின் பி3ன் ஒரு வடிவமே நியாசினமைட் ஆகும். நியாசினமைட் உள்ள சீரத்தை முகத்தில் தேய்க்கும்போது, அது சருமத்தில் உள்ள எண்ணெயின் அளவை குறைக்கும். துளைகள் குறைந்த அளவிலான எண்ணெயை சுரக்கும்போது, அதில் இறந்த செல்கள் குறைவாகவே ஒட்டும். இதை அடிப்படையாக கொண்டே, இந்த நடைமுறை விளங்குகிறது.

எந்த வகையான சருமமாக இருந்தாலும், அதில் கரும்புள்ளிகள் தோன்றுவதை, நியாசினமைட் சீரம் தடுக்கிறது. இந்த சீரத்தை, இரவு, பகல் என எந்த நேரத்திலும் பயன்படுத்தலாம் என நிபுணர் தெரிவித்துள்ளார்.

​AHA-BHA சீரம்

எக்ஸ்போலியட்டிங் சீரத்தில் உள்ள கிளைகாலிக், லெக்டிக் மற்றும் சாலிசிலிக் அமிலங்கள், முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை ஒரேநாளில் போக்க உதவுகிறது. இந்த பகுதிபொருட்கள், தோலில் உள்ள இறந்த செல்களை கரைத்து விடுவதோடு மட்டுமல்லாது, சருமத்தில் உள்ள எண்ணெயின் அளவையும் குறைக்கிறது.

இந்த சீரத்தில் உள்ள பொருட்கள் சருமத்தை எரிச்சலடைய செய்வதுடன், சூரிய ஒளிக்கு சென்சிட்டிவாக அமைந்து விடுகிறது. எனவே இந்த சீரத்தை பயன்படுத்தும்போது, அதனுடன் தவறாமல் மாய்ஸ்சுரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் லோசனை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

வறண்ட மற்றும் எண்ணெய் சருமத்தினர் பார்லர் எஃபக்ட்ல வீட்டிலேயே எப்படி பேஷியல் செய்யலாம்…

​எண்ணெய் இல்லாத மாய்ஸ்சுரைசர்

உங்களுக்கு எண்ணெய் சருமம் இருக்கிறது என்றால், அவர்கள் நிச்சயமாக எண்ணெய் இல்லாத மாய்ஸ்சுரைசர்களை பயன்படுத்தி தங்கள் தோலை ஹைட்ரேட் செய்து கொள்ள வேண்டும். உலர்ந்த மற்றும் வறண்ட சருமம், அதிகப்படியான எண்ணெயை உற்பத்தி செய்யும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எல்லா வகை சரும பாதிப்பு உள்ளவர்களும், இந்த எண்ணெய் இல்லாத மாய்ஸ்சுரைசர்களை பயன்படுத்தலாம்.

​சிலிகான் இல்லாத சன் ஸ்கிரீன்

சன் ஸ்கிரீன் அணிவதன் மூலம், நாம் சகலவிதமான சரும பாதிப்பு உள்ளவர்களுக்கும் இனிய தீர்வாக அமையும் என்று தோல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். AHA BHA சீரம், ரெட்டினால் உள்ளிட்டவைகளை கொண்டு சருமத்தை சுத்தப்படுத்த விரும்புபவர்கள், நீங்கள் உலர்ந்த தொடுதிறன் கொண்ட சன் ஸ்கிரீனை தேர்ந்து எடுக்கலாம். உலர்ந்த தொடுதிறன் கொண்ட சன் ஸ்கிரீன்களில் சிலிக்கான் அதிகளவில் உள்ளது.

சிலிக்கான்கள் நமது தோலில் படியும் ஒரு படலம் ஆகும். இதை வெறுங்கண்ணால் பார்க்க முடியாது. இதை நீக்குவதும் கடினமான ஒன்று ஆகும். இந்த சிலிக்கான்கள் தோலில் அதிகளவு சேகரம் ஆகும்போது, அது கடுமையான கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்களை ஏற்பட வழிவகுப்பதாக தோல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker