சமையல் குறிப்புகள்புதியவை

சுவையான… பன்னீர் பக்கோடா

தேவையான பொருட்கள்:

* பன்னீர் – 200 கிராம்

* தக்காளி கெட்சப் – தேவையான அளவு

* எண்ணெய் – பொரிப்பதற்கு

தேவையான அளவு மாவிற்கு…

* கடலை மாவு – ஒரு கப்

* அரிசி மாவு அல்லது சோள மாவு – கால் கப்

* ஓமம் – கால் டீஸ்பூன்

* சாட் மசாலா பவுடர் – 2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.

* அதே சமயம் ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு அல்லது சோள மாவு, ஓமம், சாட் மசாலா, மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை எடுத்து, அதில் நீரை ஊற்றி பக்கோடா மாவு பதத்திற்கு ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.

* பின் பன்னீரை எடுத்து, மெல்லிய செவ்வக துண்டுகளாக வெட்டவும். பின்பு ஒரு பன்னீர் துண்டை எடுத்து, அதன் மேல் கெட்சப்பை பரப்பி, பின் அதன் மேல் மற்றொரு பன்னீரை வைக்க வேண்டும்.

* இப்போது அதை மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பன்னீர் பக்கோடா தயார். இதேப் போல் அனைத்து பன்னீரையும் போட்டு எடுங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker