ஆரோக்கியம்

பெண்களுக்கு உடல், மன வலிமை தரும் யோகா

பெண்களின் வாழ்க்கையில் இந்த கால கட்டங்களில் யோகா முக்கியமான பங்கினை ஏற்கிறது. பதின் வயது, தாய்மை, மாதவிடாய் மற்றும் முதிர் வயது வரை பெண்களுக்கு பல வாழ்க்கை மாற்றங்கள் ஏற்படுகின்றன. மாறும் மனநிலையால் ஏற்படும் நல்லிணக்கக் குறைவிலிருந்து பெண்களுக்கு நிவாரணம் வழங்குகிறது யோகா. அது அவர்களின் வாழ்வில் சமநிலையை ஏற்படுத்தும். பெண்கள் தங்கள் வயது மற்றும் தேவைகளுக்கு ஏற்ப அன்றாட யோகா பழக்கத்தை வடிவமைத்துக் கொள்ளலாம். இதனால் அவர்கள் உடல் வலிமையையும் மன அமைதியையும் அடைய முடியும்.

பெண்களின் பதின்வயதில் யோகா மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த குழப்ப மான காலம், பெண்கள் உடலிலும், மனதிலும் பெரும் மாற்றங்களைச் சந்திக்கும் போது அவர்களது முழு வாழ்க்கைக்கும் உருவமளிக்கிறது. யோகாவின் வடிவ மைக்கப்பட்டுள்ள பல்வேறு ஆசனங்கள் இந்த கட்டத்தில் பல மாற்றங்களை எளிதில் மற்றும் வலியற்ற வகையில் ஏற்றுக் கொள்வதை உறுதிப்படுத்துகின்றன. உதாரணமாக, பிராணயாமா மற்றும் தியானம் பதின்வயதினரின் அச்சம் மற்றும் குழப்பமான மனநிலையை அமைதிப்படுத்துகிறது. பருவ வயதிலேயே ஏற்படும் உடல் மாற்றங்கள் அலைந்து திரிகின்ற மனநிலையை தோற்றுவிக்கின்றது. தனுர் ஆசனம் மற்றும் வஜ்ராசனம் போன்ற ஆசனங்கள், பெண்களுக்கு ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சியை உருவாக்க ஏற்றதாக அமைந்துள்ளன. இந்த ஆசனங்களை தொடர்ந்து பயிற்சி செய்வது பெண்களின் தசை வலிமையை மேம்படுத்தி, உடல் பருமனைத் தவிர்த்து, ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருப்பதன் மூலம் ஆரோக்கியமான இனப்பெருக்க உறுப்புகளை அவர்கள் கொண்டிருக்க உறுதி செய்கிறது.



இடைநிலை காலம் பாலினத்திற்கான கடினமான வயதுகளுள் ஒன்றாகும், ஆனால் பெண்களுக்கு இந்த சிக்கல்கள் குறிப்பிடத் தக்கவை. மாதவிடாய், எடை அதிகரிப்பு, தைராய்டு பிரச்சினைகள் மற்றும் இவை போன்ற பிற நிலைமைகள் மற்றும் வியாதிகளை பெண்கள் அனுபவிக்கிறார்கள். இந்த நேரத்தில் பெண்களுக்கு யோகாவின் நன்மைகள் குறிப்பிடத் தக்கவை. யோகா சிறந்த சிகிச்சைமுறை சக்திகளைக் கொண்டிருக்கிறது, ஹார்மோன்கள் சமநிலை பெற உதவுகிறது, எடையைக் கட்டுப்படுத்தவும், இறுதி மாதவிடாய் காலத்தை மென்மையாக கடந்து வரவும் , ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிக்கவும் உதவுகிறது. பிராணாயாமம் மற்றும் தியானம் ஆகியவை பெண்களுக்கு வாழ்க்கையில் மிகவும் கடினமான நேரத்தில் மிகவும் உதவியாக இருக்கின்றன.

அன்றாட யோகா பயிற்சி உடல், மனம், ஆத்மா ஆகியவற்றிற் கான வெளிப்படையான மற்றும் எதிர்பாராத நன்மைகளை எனக்கு வழங்கி யிருக்கிறது. இது எனக்கு ஆறுதல், பிரதிபலிப்பு, மகிழ்ச்சி, ஏற்புடைமை மற்றும் இளைப்பாறுதல் ஆகியவற்றைத் தந்திருக்கிறது. என் வேகமான வாழ்க்கையில் புதிய எல்லைகளை ஆராயும் போது என் பலம் மற்றும் பலவீனங்களை எனக்கு உணர்த்துவதிலும் மிகவும் சிக்கலான நேரங்களில் உள் ஒளிரும் சக்தியும் மற்றும் பலம் ஆகியவற்றுடன் இணைத்துக் கொள்வதிலும் எனக்கு உதவியிருக்கிறது “என்று அனிகா கூறுகிறார்.



மேலும்,” பெண்கள் வாழ்க்கையின் பொற்காலம் அவர்களுக்கு மேலும் தனிப்பட்ட சவால்களை கொண்டு வருகிறது. பெண்களுக்கான யோகா, இந்த கால கட்டத்தில், குறைந்த உடல் செயல்பாடுகளை உள்ளடக்கியது. சிக்கலற்ற ஆசனங்கள்தாம் உள்ளன. இந்த ஆசனங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த ஆசனங்கள் ஒரு ஆரோக்கியமான நரம்பு மண்டலம் உடலை நீட்டுவிக்க உதவி, மற்றும் இறுதியாக, முற்றிலும் ஓய்வெடுக்க உதவுகிறது. அனைத்து நிலைகளிலும், யோகா, இந்த கட்டத்தில், உடல் மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றைக் கொண்டுவருவதன் மூலம், சமநிலை மற்றும் இணக்கத்தை ஊக்குவிக்கிறது.” என்கிறார்.

பெண்களுக்கான ரகசியம் என்னவென்றால், யோகாவை சுவாசத்தைப் போன்று – தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் இடைவிடாது செய்வதால் யோகப் பயிற்சி பெண்களுக்கு எந்த வயதிலும் சிறந்ததாக அமையும்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker