புதியவை

‘ஸ்கிரப்பில்’ இந்த பொருட்களை பயன்படுத்தினால் ஆபத்து

ஊடரங்கு காலத்தில் பெரும்பாலானோர் வீட்டிலேயே சரும பராமரிப்பு வழிமுறைகளை கையாளுகிறார்கள். ‘பேஸ் பேக்’, ‘பேஸ் கிரப்’ என சருமத்திற்கு உபயோகப்படுத்தும் அழகு சாதன பொருட்களை வீட்டிலேயே தயாரித்து பயன் படுத்தவும் செய்கிறார்கள். ஒருசில வீட்டு உபயோகப் பொருட்களை சருமத்திற்கு நேரடியாக பயன்படுத்தக் கூடாது. அவை பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். சருமத்தின் மற்ற பகுதிகளைவிட முகம் சற்று மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும். அதற்கு பொருத்தமான பொருட்களைத்தான் உபயோகப்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் எரிச்சல், ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

முகத்திற்கு ‘ஸ்க்ரப்’களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவைதான் முகத்திற்கு பொருத்த மானது. வீட்டிலேயே ‘ஸ்கிரப்’ தயாரிப்பதாக இருந்தால் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் பொருட் களை ஒன்றாக கலக்கக்கூடாது. அவை மென்மையான முகத்தை பாழாக்கிவிடும். வீட்டில் தயாரிக்கும் ‘ஸ்கிரப்பில்’ பயன்படுத்தக் கூடாத நான்கு பொருட்கள் குறித்து பார்ப்போம்.

எலுமிச்சை: பெரும்பாலானோர் முக அழகை பராமரிப்பதற்காக தயாரிக்கும் ஸ்கிரப்பில் எலுமிச்சை பழத்தை பயன்படுத்துகிறார்கள். அது சரும ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் என்றாலும் முகத்திற்கு நேரடியாக பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் எலுமிச்சை பழம் அமிலத்தன்மை அதிகம் கொண்டது. மேலும் முகத்தில் உள்ள இயற்கை எண்ணெய்யை குறைத்து எரிச்சலை ஏற்படுத்திவிடும். சில சமயங்களில் காயங்களை உண்டாக்கிவிடும். சருமத்தில் நேரடியாக சூரிய ஒளி படும்போது பக்கவிளைவுகளும் ஏற்படலாம். அதனால் எலுமிச்சை சாறை அப்படியே பயன்படுத்தக்கூடாது. அதனுடன் அதே அளவுக்கு தண்ணீர் கலந்துதான் பயன்படுத்த வேண்டும்.

சர்க்கரை: நிறைய பேர் சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவதற்கு சர்க்கரையை பயன்படுத்துவார்கள். சர்க்கரை கட்டிகளின் விளிப்பு பகுதி கூர்மையாக இருக்கும். மேலும் சர்க்கரை துகள்கள் சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். அதிலும் முகம் போன்ற மென்மையான உணர்திறன் கொண்ட சருமத்திற்கு தீங்குதான் விளைவிக்கும். மெலானின் அதிகமாக உற்பத்தி யாவதற்கு வழிவகுக்கும். அதனால் சருமம் பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக சர்க்கரையுடன் எலுமிச்சையை மட்டும் ஒன்றாக கலந்து உபயோகிக்கக்கூடாது.

காபி கொட்டை: காபி கொட்டை களை அரைத்து சருமத்திற்கு பயன்படுத்தலாம். ஆனால் முகத்தில் நேரடியாக உபயோகிக்கக் கூடாது. ஏனெனில் காபி கொட்டையில் இருக் கும் மூலக்கூறுகள், அவற்றின் விளிம்புகள் கடினமானவை. அவற்றை முகத்தில் தடவும்போது வெட்டுக்காயங்கள் ஏற்பட வழி வகுக்கும். சருமத்தில் திட்டுகள் தோன்றக்கூடும். நிறமிழப்பு பிரச்சினையை எதிர் கொள்ளவும் கூடும். காபி பவுடரை பயன்படுத்துவதுதான் நல்லது. டீ இலை களையும் பயன்படுத்தலாம். காபி கொட்டையுடன் ஒப்பிடும் போது அது சருமத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தாது.

எண்ணெய் வகைகள்: வீட்டிலேயே ‘பேஸ் கிரப்’ செய்வதற்கு பெப்பர் மிண்ட் அல்லது லாவண்டர் எண்ணெய்யை பயன்படுத்தலாம். இருப்பினும் சிலவகை எண்ணெய்கள் மாறுபட்ட மணம், தன்மையை கொண்டிருக்கும். அவை சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தும். தடிப்புகள் தோன்றவும் வாய்ப்பிருக்கிறது. ஆதலால் எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றின் பண்புகளை அறிந்து கொள்வது அவசியமானது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker