புதியவைமருத்துவம்

குதிகால் செருப்பு அணியும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

குதிகால் செருப்பு தொடர்ந்து அணிபவர்களுக்குச் சிலசமயம் குதிகால் சிவந்து, லேசான வலி இருக்கும். குதிகால் உள் எலும்புகள் சேதமடைந்ததின் அறிகுறி இது. இதை அறியாமல், ஆயில் மசாஜ், கால் நரம்புகளை உருவிவிடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் நரம்புகளில் பாதிப்பு ஏற்படும்.

குதிகால் செருப்பு தொடர்ந்து அணியும்போது, கால் விரல்கள் பாதத்துடன் சேரும் பகுதி அதிக அழுத்தத்துக்கு உள்ளாகும்.

மேலும் குதிகால் செருப்பு அணியும்போது அதைப் பேலன்ஸ் செய்ய நம் உடல் நிலையில் சில மாற்றங்கள் தேவைப்படுகிறது. தொடர்ந்து குதிகால் செருப்பு அணியும்போது உடல் அந்த மாற்றத்தை நிரந்தரமாக மாற்றமாக ஏற்றுக்கொள்ளும். இதனால், உடலின் கீழ் இடுப்புப் பகுதி பெரியதாகுதல், முதுகுப்பகுதி வளைதல் (கூன் விழுதல்) போன்றவை ஏற்படலாம். இது தவிர, சில பெண்களுக்கு கர்ப்பபை பாதிப்புகளும் ஏற்படலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker