புதியவைவீடு-தோட்டம்

அடுப்புல வெச்ச பாத்திரம் தீஞ்சி கருப்பாயிடுச்சா… ஈஸியா வெள்ளையாக்க இதை செய்யுங்க..

எலுமிச்சை

பாத்திரத்தில் இருக்கும் அடிபிடித்த கறையை நீக்குவதற்கு முன்பு அந்த பாத்திரத்தை சாதார ணமாக கழுவி வைத்துவிடுங்கள். பிறகு எலுமிச்சையை பாதியாக நறுக்கி பிழிந்து பாத்திரத்தில் தண்ணீர் விட்டு ஊறவிடுங்கள். குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வேண்டும். பிறகு சோப்பு நீர் அல்லது துணி துவைக்கும் லிக்விட் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கரண்டியால் கலக்கி விடுங்கள். இப்போது அந்த பாத்திரத்தில் நுரை ததும்பி வழியும்.

கரண்டியால் கலக்க கலக்க அடியில் இருக்கும் கருப்பு வழுக்கி வெளியே வரும். பிறகு அந்த நீரை வெளியேற்றி ஸ்க்ரப் நார் கொண்டு அழுத்தி தேய்த்தால் கறுப்பு நீங்கி வெள்ளையாய் மின் மினுக் கும் பாத்திரம். கரண்டியால் கலக்கும் போது அதிக வேகத்தோடு பாத்திரத்தின் அடியை தேய்க்க வேண்டாம். இதனால் பாத்திரத்தின் அடியில் வேறு கீரல்கள் விழ தொடங்கும்.

வினிகர்

ஒரு பொருள் பல பயன் என்னும் பட்டியலில் வினிகரை சேர்க்கலாம். அவ்வளவு பயன் இதில். வினிகர் வீடு துடைப்பது முதல் கண்ணாடி பாத்திரங்கள் வரை அனைத்தையும் பளபளப்பாக்க வைத்திருக்க உதவும். இறைச்சியை சுத்தம் செய்வதில் தொடங்கி அடிப்பிடித்த பாத்திரம் வரை அனைத்து கறைகளையும் நீக்கும் சிறப்பு குணமிக்கது வினிகர்.

பாத்திரத்தில் படிந்திருக்கும் கறைக்கேற்ப வினிகரை ஊற்றி இலேசாக ஸ்க்ரப் செய்து கொதிக்கும் நீரை ஊற்றுங்கள். நீர்பாத்திரத்தின் தீய்ந்த பகுதி மூழ்கும் வரையில் இருக்க வேண்டும். 20 நிமி டங்கள் கழித்து அந்த நீரை வெளியேற்றி இலேசாக ஸ்க்ரப் செய்தாலே தீப்பிடித்த கறை நீங்கியி ருக்கும். அப்படியும் தீய்ந்த பகுதி இருந்தால் மீண்டும் ஒரு முறை வினிகரை இப்படி வெந்நீரில் ஊறவைத்து எடுத்தால் போதும். தீய்ந்திருக்கும் மொத்தபகுதியும் நீங்கி பாத்திரம் முழுக்க பளிச் என்று மின்னும்.

​பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா கிருமிகளை நீக்கி பளிச்சென்று வைக்க உதவும் பொருள்.பேக்கிக் சோடாவை பாத்திரத்தின் மேலாக தூவி அழுத்தி ஸ்க்ரப் செய்யவும். ஒரு முறை ஸ்க்ரப் செய்தால் போய்விடும் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒரு மணி நேரத்தில் கால் மணி நேரத்துக்கு ஒரு முறை ஸ்க்ரப் செய்து ஸ்க்ரப் செய்து வெந்நீர் சேர்த்து ஊற விட்டு ஊறவிட்டு வைத்து எடுத்தால் கருப்பு நீங்கி வெளியேறும்.

அலுமினிய பாத்திரமாக இருந்தாலும் சில்வர் பாத்திரமாக இருந்தாலும் எந்த கறையாக இருந்தா லும் உடனடியாக நீங்க இவை பெரிதும் உதவியாக இருக்கும். சாதாரணமாகவே கறையை போக்க பேக்கிங் சோடாவை இலேசாக தொட்டு ஸ்க்ரப் செய்தாலே போதுமானது.

உப்பு

கரகரவென்று இருக்கும் உப்பு அழுக்கையும் கருப்பையும் நீக்கவல்லது. அழுத்தி ஸ்க்ரப் செய்து தேய்க்க தேய்க்க அந்த கறை நீங்க தொடங்கும்.

வீட்டிலேயே எளிய முறையில் சுத்தம் செய்யும் குறிப்புகள் தான் இவை. சற்று பொறுமை இருந்தால் போதும் பாத்திரத்தில் எந்த கறையும் இல்லாமல் போகும். இனி பாத்திரம் வீணாகிவிடுமே என்ற கவலையும் வேண்டாம். பாத்திரம் தீய்ந்துவிட்டால் தூக்கி எறியவும் வேண்டாம். வீட்டில் இருக்கும் கறைபடிந்த பாத்திரங்களை தேடி பிடித்து பளீர் வெள்ளையாக்குங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker