அழகு..அழகு..புதியவை

பேனும் அரிப்பும் இருந்தா பாட்டியோட இந்த டிப்ஸ்ல ஒண்ணு ஃபாலோ பண்ணுங்க, நிரந்தரமா போயிடும்

கூந்தலின் வளர்ச்சியை கெடுப்பதில் பேன்களுக்கும் பங்குண்டு. பேன், பொடுகு, அரிப்பு, செதிலாக உதிர்வு என உச்சந்தலை பிரச்சனைகள் அனைத்துமே கூந்தலின் வளர்ச்சியை பாதிக்க கூடியவை. அதோடு பேன் அரிப்பு என்பது வெளி இடங்களில் சங்கடத்தை கொடுக்க கூடியவையும் கூட.

பேன் பிரச்சனையை எதிர்கொள்பவர்கள் என்ன பராமரிப்பு செய்தாலும் அது தற்காலிகமான தீர்வாகத்தான் இருக்கும். இதற்கு அந்த காலத்தில் பாட்டிகள் கடைப்பிடித்த கை வைத்தியம் பலனளிக்கும். அதற்கான வைத்திய முறைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

கருந்துளசி

பேன் பிரச்சனை இருக்கும் போது அதை சீவி எடுப்பதை காட்டிலும் உள்ளிருக்கும் பேனை வெளியேற்றுவதுதான் சிறந்த வழியாக இருக்கும். துளசியை காட்டிலும் கருந்துளசி நிச்சயம் பலனளிக்கும். கருந்துளசியை எடுத்து வந்து மேலாக்க சுத்தம் செய்து மெல்லிய வெள்ளைத்துணியில் வைத்து தலையணை போல் சுற்றவும்.

இரவில் தனியாக இந்த தலையணையின் மீது வைத்து படுக்கவும். மறுநாள் காலை எழுந்தால் பேன் துணியில் இறக்கி இருக்கும். பேன் முழுவதும் நீங்கும் வரை இப்படி செய்யலாம். ஆனால் தினமும் கருந்துளசி அடைத்த துணியை மாற்றவும். குறைந்தது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறையேனும்.

​மருதாணியும் வசம்பும்

மருதாணி இலைகளில் இருக்கும் விதைகளை மட்டும் தனியாக எடுத்து பொடிக்கவும். அதில் சம அளவு வசம்புத்தூள் சேர்த்து கலக்கவும். இதனுடன் தேவையெனில் வெந்தயம் சேர்த்து கலந்து நன்றாக குழைத்து விடவும்.

தலைக்குளியலுக்கு முன்பு இதை கூந்தலில் ஸ்கால்ப் பகுதியில் மட்டும் தடவி அரை மணி நேரம் ஊறவிட்டு கூந்தலை சீயக்காய் அல்லது வெறுமனே போட்டு அலசி எடுத்தால் பேன் தொல்லை நிரந்தரமக போகும். வசம்பு கூடுதலாக தலையில் இருக்கும் அரிப்பு மற்றும் பொடுகை போக்கும்.

வேப்பம் பூ

வேப்பம் பூவை பறித்து வந்து 5 மணி நேரம் நிழலில் உலர்த்தவும். வாணலில் இலேசாக வேப்ப எண்ணெய் விட்டு பூவை கொட்டி வதக்கவும். பூ அதிகம் வதங்க வேண்டாம். இரண்டு நிமிடங்கள் வதங்கினால் போதும். இதை கூந்தலின் ஸ்கால்ப் பகுதியில் தடவி அதன் மேல் மெல்லிய துணியை போர்த்தவும்.

அதை அப்படியே இலேசாக கீழே விழாமல் கட்டி விடவும். இரவு முழுக்க அப்படியே வைத்திருந்து காலையில் எடுத்துவிட்டு கூந்தலில் மெல்லிய சீப்பு கொண்டு சீவினாலே பேன் நன்றாக உதிர்ந்துவிடும். பேனோடு அரிப்பு பொடுகு பிரச்சனையும் நீங்கும்.

​கடலைப்பருப்பு பேக்

சாதாரணமாக சீப்பு போட்டு வாரினாலே பேன் விழுந்தால் அவர்களுக்கு இந்த பேக் நிச்சயம் உதவும். கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், கருப்பு வெற்றிலை – 3, மஞ்சள் – சிறு துண்டு அல்லது கால் டீஸ்பூன் அளவு, வெங்காயம் சிறியது – 2 பூண்டு பற்கள் – 4 அனைத்தையும் கலந்து மொத்தமாக மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

இதை கூந்தலின் ஸ்கால்ப் பகுதி முழுக்க தடவி அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து வந்தால் பேன் நிச்சயம் போகும். பொடுகு, அரிப்பும் நீங்கும். பேன் குறையும் வரை தொடர்ந்து இதை வாரம் ஒரு முறை போடலாம்.

​தண்ணீரை சுத்தம் செய்யும் படிகாரம்

படிகாரம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை வாங்கி வந்து சிறு அளவு எடுத்து நீரில் கலக்கவும். அதனுடன் மூக்குப்பொடி கால் டீஸ்பூன் அளவு எடுத்து கலக்கவும். இந்த இரண்டும் நன்றாக சேர்ந்து கலந்ததும் காட்டன் பஞ்சில் நனைத்து உச்சந்தலையில் தொட்டு தொட்டு ஒற்றி எடுக்கவும்.

தொடர்ந்து இதை செய்து வந்தால் பேன் பிரச்சனை முழுவதும் நீங்க கூடும். பொடுகும் நீங்கும். மூக்குப்பொடி வாடை கூந்தலில் அடிக்கும் என்பதால் இதை பயன்படுத்திய இரண்டு நாட்களுக்கு பிறகு கூந்தலை நன்றாக சீயக்காய் அல்லது ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும்.

வில்வக்காய்

பேனும் பொடுகும் அதிகமாக இருந்தால் வில்வக்காய் எடுத்து வந்து துண்டுகளாக வெட்டி நிழலில் உலர்த்தி காயவைத்து பொடியாக்கவும். இதில் இரண்டுக்கு ஒரு மடங்கு சீயக்காய் பொடி சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் குழைத்து கூந்தலின் ஸ்கால்ப் பகுதி முழுக்க தடவி ஒரு மணி நேரம் வரை விட்டு பிறகு சீயக்காய் கலந்து தேய்த்து குளித்து வந்தால் பேன் நிரந்தரமாக நீங்கும். இதை பயன்படுத்திய பிறகு மீண்டும் தலையில் பேன் பிடித்தாலும் மீண்டும் இதை செய்தால் ஆரம்பத்திலேயே ஓடி விடும்.

தலையில் பேன் வரும் போது ஆரம்பத்திலேயே இதில் ஒன்றை தொடர்ந்து செய்து வந்தால் பேன் நிரந்தரமாக ஓடி விடும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker