ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

பிஸ்தாவில் இத்தனை அற்புத மருத்துவ குணங்கள் உண்டா…?

பிஸ்தா பருப்பில் அதிக அளவில் வைட்டமின் பி6 உள்ளது. இது ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது. பிஸ்தா பருப்பை சூடான பாலில் ஊறவைத்து தினமும் மாலையில் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
செல்களுக்கு ஆக்ஸிஜனை கொடுக்கிறது. மேலும் வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்து மண்ணீரல் மற்றும் நிணநீர்  பராமரிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
பிஸ்தா பருப்பு வைட்டமின் ஏ மற்றும் இ போன்ற சத்துக்கள் ரத்த நாளங்களை பாதுகாக்கும். மேலும் இதயநோய் அபாயத்தை குறைக்கும் சக்தி கொண்டது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது. அதோடு இது செல்களுக்கு ஆக்சிஜனையும் கொடுக்கிறது.
வைட்டமின் பி6-ல் ஹீமோகுளோபின் என்ற அமிலம் அதிகப்படுத்தக்கூடிய தன்மையும், ஆக்ஸிஜனை ரத்த ஓட்டம் வழியாக செல்களுக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு மற்றும் ஆக்ஸிஜனை அளவை அதிகரிக்கும் பணியை செய்கிறது.
பிஸ்தா சாப்பிடுவது உடலில் உள்ள கெட்ட எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கும். ஆரோக்கியம் தரும் எச்டிஎல் கொழுப்பை அதிகரிக்கும். டைப் 2  நீரிழிவு நோயில் இருந்தும் பிஸ்தா காக்கிறது.
ஒரு கப் பிஸ்தா பருப்பில் 60 சதவீதம் மினரல், பாஸ்பரஸ் இருக்கிறது. இதில் உள்ள வைட்டமின் ஈ ஆனது புறஊதாக் கதிர்களால் தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும். தோல் புற்றுநோய் வராமல் இருக்கவும் உதவுகிறது
பிஸ்தாவில் சியாசாந்தின், லூட்டின் ஆகிய இரு கரோட்டினாய்டுகள் காணப்படுகின்றன. இவை கண்ணின் விழித்திரையைப் பாதுகாத்து,  தெளிவான பார்வைக்கு வழிவகுக்கின்றன.
இதய நோய்கள் வராமல் தடுப்பதிலும், கண்புரை நோயில் இருந்து காப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதயநோய் அபாயத்தைக் குறைக்கும் சக்தி கொண்டதாகவும் விளங்குகிறது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker