சமையல் குறிப்புகள்புதியவை

சூப்பரான பன்னீர் டிக்கா மசாலா

தேவையான பொருட்கள் :

பனீர் துண்டுகள் – 250 கிராம்

தயிர் – 1/4 கப்
துருவிய இஞ்சி – 1 மேசைக்கரண்டி
தனியா தூள் – அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

கிரேவிக்கு :

தக்காளி – 3
பச்சைமிளகாய் – 4
மஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி
தனியா தூள் 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
தயிர் – 3 மேசைக்கரண்டி
சர்க்கரை – 1/2 தேக்கரண்டி

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

தக்காளியையும் பச்சைமிளகாயையும் மிக்சியில் நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு  பாத்திரத்திரத்தில் பன்னீர் துண்டுகள், தயிர், துருவிய இஞ்சி, தனியா தூள், மிளகாய் தூள் சிறிது உப்பு போட்டு நன்றாக கலந்து ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறவைத்த பன்னீர் மசாலா துண்டுகளை போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த விழுதினை சேர்த்து கிளறவேண்டும்.

அடுத்து அதனுடன் மஞ்சள்தூள், தனியா தூள், கரம்மசாலா, பெருங்காயத்தூள், சீரகம், தேவையான உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும்.

கடைசியில் தயிரையும் சர்க்கரையும் சேர்த்து இறக்கவேண்டும்.

இறக்கிய பின் வறுத்த பன்னீர் துண்டுகளை சேர்க்க கலந்து பரிமாறவும்.

சூப்பரான பன்னீர் டிக்கா மசாலா ரெடி.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker