சமையல் குறிப்புகள்புதியவை

கமகமக்கும் மட்டன் கொத்துக்கறி பிரியாணி

தேவையான பொருட்கள் :

மட்டன் கொத்துக்கறி – 250 கிராம்

சீரக சம்பா அரிசி – 300 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
இஞ்சி – பூண்டு விழுது – 3 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – 4 டீஸ்பூன்
புதினா – சிறிதளவு
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2
பிரிஞ்சி இலை – ஒன்று
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
மிளகாய்த்தூள் – தேவையான அளவு
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்
நெய் – தேவையான அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

தக்காளி, வெங்காயம், ப.மிளகாய நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

கொத்துக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை தோல் உரித்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.

குக்கரை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றிச் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளித்து சேர்த்து தாளித்த பின்னர் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

இஞ்சி – பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

அடுத்து மட்டனையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

இதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து அரைத்து வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து, தீயைக் குறைத்து 15 நிமிடங்கள் வதக்கவும்.

எண்ணெய் பிரிந்து வரும்போது தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதி வந்ததும் அரிசியைப் போட்டு அரிசி முக்கால் பதம் வரும் வரை வேகவிட்டு, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நெய் விட்டு நன்கு புரட்டவும்.

பின்னர் குக்கரை மூடி, `வெயிட்’ போட்டு, தீயைக் குறைத்து, 15 நிமிடங்களுக்குப் பிறகு இறக்கினால்… கமகம மட்டன் கொத்துக்கறி பிரியாணி ரெடி.

குறிப்பு: சீரக சம்பா அரிசியை 10 நிமிடங்கள் தண்ணீரில் போட்டு எடுத்துக் களையவும். அரிசி ஒரு பங்குக்கு, 2 பங்கு தண்ணீர் போதுமானது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker