ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

கர்ப்பக்கால சர்க்கரை நோய் எதனால் வருகிறது?

கர்ப்பக்கால சர்க்கரை நோய் எதனால் வருகிறது?

கர்ப்பிணி பெண்கள் தங்களுடைய கர்ப்பக் காலத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதனால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு சர்க்கரை நோய் வராமல் பாதுகாக்க முடியும். தாய், சேய் என இரண்டு உயிர்கள் வெவ்வேறாக இருந்தாலும் தாயின் ஆரோக்கியமின்மை குழந்தையைப் பாதிக்கும். ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டுமெனில், தாய் போதுமான அளவு இன்சுலின் சுரப்பும், சரியான ரத்த சர்க்கரையும் இருக்க வேண்டியது அவசியம்.






யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?

* நடுத்தர வயதில் குழந்தை பெற்று கொள்ளும் தாய்மார்கள், இவர்களுக்கு பிறக்கும் குழந்தையும் சர்க்கரை நோய் தாக்கத்தால் பாதிக்கலாம்.

* தாயின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை, குழந்தையின் நஞ்சுப் பையைத் தாண்டி செல்வது போல், இன்சுலின் செல்களால் நஞ்சுப்பையை தாண்டி செல்ல இயலாததால், தாயின் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பது போல கருவில் உள்ள குழந்தையின் ரத்தத்திலும் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.

* இதற்காக கருவில் உள்ள குழந்தையின் கணையம் ஆரம்பக் காலத்திலே அதிகமான அளவு இன்சுலினை சுரக்க வேண்டியுள்ளது.

* இதனால் கிடைத்த ஆற்றலானது கொழுப்பு செல்களாக குழந்தையில் தோலுக்கு அடியிலும், கல்லீரலும் சேமிக்கப்படுகிறது. இதனால் வயிற்றுக்குள் குழந்தை எடை அதிகரித்து கொழு கொழுவென்று மாற ஆரம்பிக்கிறது.

* இவ்வாறு கொழு கொழு குழந்தை பிரசவத்துக்குப் பின் வெளியே வந்ததும், திடீரென ரத்த சர்க்கரை அளவு குறைந்து இன்சுலின் சுரப்பு அதிகரித்து, மூச்சுத் திணறலுக்கோ அல்லது குறை ரத்த சர்க்கரை நோயுக்கோ ஆளாகிறது.






* இதனால் கர்ப்பக்கால சர்க்கரை நோய் உள்ள தாயுக்கும் பிறந்த குழந்தைக்கும் தொடர் மருத்துவ சிகிச்சை அவசியம்.

எதனால் கர்ப்பக்கால சர்க்கரை நோய் தாய்க்கு வருகிறது?

* பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருப்பது.
* தாமதமாகக் கருத்தரிப்பது
* உடற்பருமன்

* முந்தைய கருத்தருப்பின் போது கர்ப்பக்கால சர்க்கரை நோய் இருத்தால்…

கர்ப்பக்காலத்தில் தாய்க்கு தேவையானவை…

* சரிவிகித உணவு.
* மருத்துவரின் வழிகாட்டுதலுடன் மருந்துகள் சாப்பிடுதல்.
* இன்சுலின் சுரப்பு சீராக இருக்க வேண்டும்.
* முறையான ரத்த சர்க்கரை பரிசோதனைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
* குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்க வேண்டும்.
* உணவில் அடிக்கடி சீரகம், கருஞ்சீரகம், எள் சேர்ப்பது நல்லது.






உணவில் சேர்த்து சாப்பிட வேண்டியவை

* சுரைக்காய்
* பாகற்காய்
* வாழைத்தண்டு
* வெள்ளை முள்ளங்கி
* அவரைக்காய்
* முருங்கைக்காய்
* கீரைகள்
* சின்ன வெங்காயம்
* வாழைப்பூ
* வெண்டைக்காய்
* நூல்கோல்
* காராமணி
* பூசணிக்காய்
* பிஞ்சு கத்திரிக்காய்
* முட்டைக்கோஸ் ஆகியவை நல்லது. இவை சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker