சமையல் குறிப்புகள்புதியவை

பேரீச்சம்பழ கீர் செய்வது எப்படி?

பேரீச்சம்பழ கீர் செய்வது எப்படி?






தேவையான பொருட்கள் :

பேரீச்சம்பழம் – ஒரு கப்

கசகசா – ஒரு டேபிள்ஸ்பூன்

உலர்திராட்சை – அரை கப்
பனை வெல்லம் – அரை கப்
பாதாம், முந்திரி கலவை – அரை கப்
தேங்காய்ப்பால் – 2 கப்
சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்

நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பாதாம், முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பேரீச்சம் பழத்தை கொட்டையை எடுத்து விட்டு தனியாக வைக்கவும்.

பனை வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.

சோள மாவை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.

வெறும் வாணலியில் கசகசாவை வறுத்து, ஆறிய பின் மிக்ஸியில் பவுடராக அரைக்கவும்.

பேரீச்சம்பழத்தினை உலர் திராட்சை சேர்த்து மிக்ஸியில் தண்ணீர்விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும்.

அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டு உருகியதும் பாதாம், முந்திரி சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

அதே பாத்திரத்தில் அரைத்த பேரீச்சம் விழுது சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கவும்.

பின்பு அதனுடன் பனை வெல்லம் சேர்த்துக் கிளறவும்.






பிறகு சோள கரைசல், தேங்காய்ப்பால் சேர்த்துக் கலக்கவும்.

கசகசா பவுடர் சேர்த்துக் கொதிவிட்டு இறக்கவும்.

திக்கான பதம் வந்தவுடன் மேலே வறுத்த பாதாம், முந்திரி சேர்த்து அலங்கரித்து சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறலாம்.

சூப்பரான பேரீச்சம்பழ கீர் ரெடி.

அடுத்து அதனுடன் வேகவைத்த பருப்பை, சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

கடைசியாக நறுக்கிய கொத்தமல்லித்தழைத் தூவிப் பரிமாறவும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker