குழந்தைகளுக்கு விருப்பமான காரசாரமான பாஸ்தா பிரியாணி
தேவையான பொருட்கள் :
பென்னே பாஸ்தா – 200 கிராம்,
கேரட், பீன்ஸ் – 1/4 கப்,
வெங்காயம் – 2
தக்காளி – 2
கொத்தமல்லி – 1/2 கட்டு
புதினா – 1/2 கட்டு
தயிர் – 2 கப்,
உப்பு – தேவைக்கு,
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் – 2 டீஸ்பூன்,
தனியா தூள் – 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்.
தாளிக்க…
எண்ணெய் – தேவையான அளவு
வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
சோம்பு – 2 டீஸ்பூன்,
பட்டை – 2,
கிராம்பு – 2,
பிரிஞ்சி இலை – 2.
செய்முறை :
குடைமிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு வெந்தவுடன் ஒரு வடிதட்டில் கொட்டி குளிர்ந்த நீரில் அலசி ஒரு தட்டில் சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து வைக்கவும். அப்போது தான் பாஸ்தா ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.
கடாயில் எண்ணெய், வெண்ணெய் ஊற்றி காய வைத்து முதலில் தாளிக்கக் கொடுத்த பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் காய்கறிகள், உப்பு, கொத்தமல்லி, புதினா, குடைமிளகாயை போட்டு வதக்கவும்.
இப்போது மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் போட்டு வதக்கவும்.
காய்கள் வதங்கிய பின் தயாராக வைத்துள்ள தயிரைப் போட்டு மூடி வைக்கவும்.
மசாலாப் பொருட்கள், காய்கறிகள் எல்லாம் சேர்ந்து வெந்து ஓரத்தில் எண்ணெய் பிரிந்து வரும் போது பாஸ்தாவைச் சேர்த்துக் கலந்த பின்னர் இறக்கி சுடச்சுட பரிமாறவும்.
சூப்பரான பாஸ்தா பிரியாணி ரெடி.