ஆரோக்கியம்புதியவை

சிக்கனை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து

சிலர் சிக்கனில் நன்கு கழுவி மசாலா பொருட்களை தடவி பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவார்கள். இருப்பினும் இதில் எவ்வளவு ஆபத்து உள்ளது என்று இதுவரை தெரியுமா? உயிரையே பறிக்கும் அளவுக்கு இதில் நோய்தொற்றுக்கள் அதிகம் உண்டு.

பிரிட்ஜில் வைத்து சமைக்கும் சிக்கனில் உள்ள பாக்டீரியாக்கள் நேரடியாக இரத்தத்தின் வழியே உள்ளே செல்கின்றன, அதனால் அவை இரத்த செல்களைப் பாதிக்கும் அபாயம் உண்டு. இதுவே பல நோய்த்தொற்றுக்கள் உண்டாகக் காரணமாக இருக்கின்றன.

பிரிட்ஜில் வைத்து பின் அதை சாப்பிடுவதால், அதிலுள்ள பாக்டீரியாக்கள் நேரடியாகக் கல்லீரலைத் தாக்கும். இதனால் கல்லீரல் வீக்கம், தொற்று ஆகியவை உண்டாகும்.

சிக்கனில் உள்ள கொழுப்பின் காரணமாக சரும பாதிப்புகள். பருக்கள் ஆகியவை உண்டாகும். சரும அலர்ஜிகள், தோல் அரிப்பு ஆகியவை உண்டாக காரணமாகவும் அமைகின்றது.

பாக்டீரியா தொற்றுக்கள் தொண்டையில் ஏற்பட்டு தொண்டையில் டான்சில், தைராய்டு போன்ற பிரச்சினைகளை உண்டாக்கி விடுகின்றது. ஜீரணக்கோளாறுகளை உருவாக்கி விடுகின்றது.

சிக்கன் மூலமாக பாக்டீரியா தொற்று ஏற்பட்டு நுரையீரலை பாதித்து, சுவாசப் பிரச்சினைகளை உண்டாக்குகிறது.

பிறப்புறுப்புகளை பாக்டீரியா தொற்றுக்கள் தாக்குவதால், கருக்குழாயில் அலர்ஜி உண்டாகிறது. அதுமட்டுமின்றி கருக்குழாய் புற்றுநோய் கூட ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

கர்ப்ப காலங்களில் இதுபோன்ற பதப்படுத்த உணவுகளை சாப்பிடுவதால், கருவில் இருக்கும் குழந்தைக்கும் பாக்டீரியா தொற்றுக்கள் உண்டாக்கி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker