உலக நடப்புகள்புதியவை

முதியோர்களின் வாழ்வினை ஆரோக்கியமாக்குவோம்

* பல வசதிகள் இருந்தாலும் உறவு, நட்பு இன்றி தனித்து இருப்பதே பல நோய்கள் பாதிப்பிற்கு காரணமாகி விடுகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. தனிமை இவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகின்றதாம்.

* உடன், உறவுகள் இருக்கும் பொழுது ஆரோக்கியமான உணவினை நன்கு சமைத்து உண்ண முடிகின்றதாம். தனித்து இருப்பவர்களுக்கு இது இயலுவதில்லை.

* உடன் இருப்பவர்களால் பல உதவிகளை பெற முடிகின்றது. உடைமாற்ற, மாத்திரை எடுத்துக் கொள்வது போன்றவை உடன். உறவுகள் இருக்கும் பொழுதே முடிகின்றதாம்.

* வேலைச் சுமை குறைவதால் எளிதில் சோர்வடையாமல் இருக்கச் செய்கின்றதாம்.

* வெளியில் துணையோடு சென்று வர முடிகின்றது.

* அவசரத்திற்கு அருகில் நம்பகமானவர்கள் இருப்பதால் அச்சமின்றி இருக்க முடிகின்றது.

மருத்துவ முன்னேற்றம் இன்று மனிதனுக்கு நீண்ட ஆயுளை கொடுத்துள்ளது. ஆனால் முதுமையினை மருத்துவத்தால் வெல்ல முடியாது. இது மனித அன்பினால் மட்டுமே முடியும். இதனை வெளிநாட்டினர் நன்கு உணர ஆரம்பித்து விட்டனர். இதனை நாமும் உணர்ந்து முதியோர்களின் வாழ்வினை ஆரோக்கியமாக்குவோம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker