புதியவைமருத்துவம்

பக்கவாதத்தைத் தடுக்கும் முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்ற காய்கறிகளை தொடர்ந்து சாப்பிட்டால் பக்கவாதத்தைத் தவிர்க்கலாம் என்று ஒரு புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்ற காய்கறிகளை தொடர்ந்து சாப்பிட்டால் பக்கவாதத்தைத் தவிர்க்கலாம் என்று ஒரு புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். அவர்கள் சுமார் 70 வயதான 954 பெண்களிடம் இந்த ஆய்வை நடத்தினர். அவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு அறிந்தனர்.

ஆய்வின் முடிவில் அவர்கள் தெரிவித்த தகவல்:

வயதில் மூத்த பெண்கள் முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்றவற்றை சாப்பிட்டு வருவதால் பக்கவாத நோய் அபாயத்தில் இருந்து விடுபடுகிறார்கள். தினமும் மூன்று வேளை உணவில் காய்கறிகளைச் சேர்த்து சாப்பிட்டு வருவதால் ரத்த நாளங்கள் வலுவடைகின்றன. மேலும், முட்டைக்கோஸ் வகைகளை சாப்பிடுவதால் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்து விடுகின்றன.

அமெரிக்காவில் உள்ள, இதயத்தைப் பாதுகாக்கும் அமைப்பின் சார்பில் வெளிவரும் இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆய்வில் ஈடுபட்ட டாக்டர் லாரன் பிளாகன் ஹார்ஸ்ட் கூறுகையில், ‘இந்த ஆய்வின் மூலம், இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்கள் வலுவடைய சத்தான காய்கறிகள் சாப்பிடுவது அவசியம் எனத் தெரியவந்தது. இப்பழக்கத்தால் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பும் கணிசமாகக் குறைகிறது’ என்றார்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker