தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

சிறுமிகள் பாலியல் வன்முறையும் பயங்கரவாதமே

இந்த நபர்கள் கோரமானவர்களாகவோ அச்சம் கொள்ளும் தோற்றத்திலோ தெரிய மாட்டார்கள். மிகவும் நட்பாக குழந்தைகளிடம் பழகும், குழந்தைகளை எளிதாக வசியப்படுத்தும் ஆற்றல் கொண்டவர்களாகவே இருப்பார்கள். இதில் இன்னொரு பெரும் கொடுமை என்னவென்றால் பெண் குழந்தைகளின் பாதிப்புகூட வெளியில் தெரிகிறது. பேசப்படுகிறது, தண்டனையும் கிடைக்கிறது. ஆனால், ஆண் குழந்தைகள் மீது நிகழும் பாலியல் வன்முறைகள் சுத்தமாக வெளிவருவதில்லை. அதை யாரும் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. இப்போது பெண் குழந்தைகள் உன்னிப்பாக கவனிக்கப்படுவதால் இவர்களின் பார்வை ஆண் குழந்தைகள் பக்கம் திரும்பி இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது.

இவ்விதமான நோயாளிகள் வெளியாட்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 82 சதவீதம் குழந்தைகள் பாதிக்கப்படுவது சொந்த குடும்ப உறுப்பினர்களால் தான். சில வேளைகளில் பள்ளி வாகன ஓட்டுநர்கள், ஆசிரியர்கள், மதகுருக்கள் போன்றவர்களும் குழந்தைகளை எளிதாக பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்குகின்றனர். இந்த பாலியல் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவது மிகமிக அவசியம்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker