சமையல் குறிப்புகள்புதியவை

தித்திப்பான பேரீச்சம்பழ இலை அடை

கேரளாவில் இலை அடை மிகவும் பிரபலம். இன்று பேரீச்சம் பழம் சேர்த்து தித்திப்பான இலை அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

அரிசி மாவு- கால் கிலோ,
மைதா மாவு, – கால் கிலோ,
பால் – அரை லிட்டர்,
பால் பவுடர் – கால் கப்,
பேரீச்சம்பழம் – ஒரு கப்,
தேங்காய் துருவல் – ஒரு கப்,
பொடித்த வெல்லம் – ஒன்றரை கப்,
முந்திரி – 20,
ஏலக்காய்த்தூள், நெய், உப்பு – சிறிதளவு.

செய்முறை:

பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்து அதில் அரிசி மாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

முந்திரியை நன்கு பொடித்து நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.

பேரீச்சம்பழத்தை ஊற வைத்து நைஸாக அரைத்து… அதனுடன் தேங்காய் துருவல், பால் பவுடர், பொடித்த முந்திரி, பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து வாணலியில் லேசாக புரட்டவும். பூரணம் தயார்.

சதுரமாக நறுக்கிய வாழை இலையை ஒரு தட்டில் வைத்து, அதன் மேல் மாவுக் கலவையை விட்டு ஒரு ஸ்பூனில் பூரணத்தை வைத்து, இலையின் மறுபாதியால் மூடி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

– இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker