புதியவைமருத்துவம்

கோடை காலத்தில் அசைவம் சாப்பிடலாமா?

பொதுவாகவே, `கோழிக்கறி (சிக்கன்) சாப்பிடுவதால் வாத, பித்த, கப நாடி வகைகளில் பித்த நாடி மேலோங்கும்’ என்று சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் நாடி விஞ்ஞானத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. `கோழிக்கறி உடலில் சூட்டை உண்டாக்கும் குணமுடையது. அதற்கு பதிலாக குளிர்ச்சித் தன்மையுள்ள ஆட்டுக்கறியைச் சாப்பிடலாம்’ என்று சொன்னால் அதுவும் தவறானதே. ஏனென்றால் வெயில் காலத்தில் ஏற்படும் செரிமானக் கோளாறால் மலச்சிக்கலும் வயிற்று உபாதைகளும் ஏற்படும். அசைவம் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்று விரும்புபவர்கள் மீன் குழம்புவைத்து, குறைந்த அளவில் சாப்பிடலாம்.

அதற்காக மீன் மசாலா, பொரித்த மீனெல்லாம் சாப்பிடக் கூடாது. கோடை காலத்தில் மறந்தும்கூட சேர்க்கக் கூடாதது நண்டு. அது உடலில் எரிச்சலை ஏற்படுத்தும்; அலர்ஜி உண்டாகவும் அதிக வாய்ப்புண்டு. ஃபாஸ்ட்ஃபுட், பீட்சா, பர்கர், சிப்ஸ், சிக்கன் ஃப்ரை, கொழுப்பு அதிகமுள்ள உணவுகளையும் வெயில் காலத்தில் தவிர்ப்பது நல்லது.

கோடை காலத்தில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படும். ஆகவே நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதுடன் அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடையில்  மசாலா உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதிகப் புரதம், கொழுப்புச் சத்து நிறைந்த மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, சிக்கன் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். மட்டன், சிக்கன் போன்றவை செரிமானக்கோளாறை ஏற்படுத்தும்; சரும நோய்களை உண்டாக்கும். கை கால் மற்றும் முகத்தில் வியர்க்குரு, தேமல், கட்டிகள், அம்மை போன்ற நோய்கள் வரவும் அசைவ உணவுகள் காரணமாக வாய்ப்புண்டு.

நண்டு, இறால் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. இவை வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி, நீர்ச்சத்துக் குறைபாட்டை உண்டாக்கலாம். இதேபோல் தந்தூரி வகை உணவுகள், வறுத்த, பொரித்த உணவுகளும் வேண்டாம். அசைவ உணவுகள் சாப்பிட வேண்டும் என்றால், நெத்திலி போன்ற மீன்களைச் சாப்பிடலாம். முட்டை சாப்பிடலாம், அதையும் அளவாக சாப்பிட வேண்டும்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker