சமையல் குறிப்புகள்புதியவை

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சம்பா ரவை காய்கறி உப்புமா

சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சம்பா ரவையை சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. இன்று சம்பா ரவை காய்கறி உப்புமா செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
இஞ்சி – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
பச்சை பட்டாணி – 1/2 கப்
கேரட் – 1
சம்பா ரவை – 1/2 கப்

செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லி, கேரட், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

சம்பா ரவையை நீரில் அலசி, நீரை முற்றிலும் வடிகட்டி தனியாக வைக்க வேண்டும். பின்னர் 2 கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் ரவையைப் போட்டு நன்கு 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதனை இறக்கி, நீரை வடிகட்டி வைக்க வேண்டும்.

குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, 2 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து அதில் துருவிய இஞ்சியை சேர்த்து கிளறி, பச்சை பட்டாணி மற்றும் கேரட் சேர்த்து, பிரட்டி 2 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

பிறகு அத்துடன் சம்பா ரவையை சேர்த்து, 1 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, குக்கரை மூடி, தீயை குறைவில் வைத்து, 2 விசில் விட்டு, இறக்க வேண்டும்.
பின் குக்கரை திறந்து, அதன் மேல் கொத்தமல்லியை சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.

சம்பா ரவை காய்கறி உப்புமா ரெடி.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker