வலிகளை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்..
-Niruba Gunendren-
தனியே அழுது தனியே விழுந்து தனி அறைக்குள் கதறி அழவும் முடியாமல் சோகங்களை மனதுக்குள் அடக்கி மௌனமாய் கண்ணீர் வடிக்கும் எம் போன்ற பெண்களின் வலி நீங்கள் அறிந்த்ததுண்டா ஆர்ப்பரிக்கும் உதடுகள் இடையே வர மறுக்கும் புன்னகையை வலுக்கட்டாயமாய் வரவைக்கும் எங்களின் திமிர்களின் சக்தியை நீங்கள் உணர்வீர்களா?? மனதிற்கு பிடித்தமானவர்களுக்காய் பார்த்து பார்த்து செய்யும் நாங்கள் என்னதான் எதிர்பார்க்கின்றோம் என்பதை சிரிக்கணமேனும் நீங்கள் சிந்தித்தது உண்டா????
நீங்கள் எங்கள் மீது காட்டும் சிறு அக்கறையும் எங்களுக்குள் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை உங்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது… எங்கள் தேடல்கள் விருப்பங்கள் எல்லாம் உங்கள் கோட்டுக்குள் தான் வரையறுக்கப்பட்டு இருக்கின்றன… இருந்தும் இன்று வரை போராடிக்கொண்டு தான் இருக்கின்றோம் எங்களுக்கான உங்களின் ஒரு வினாடி நேரத்திற்காய் …. வண்ண வண்ணமாய் உடை மினுமினுக்கும் தங்கங்கள் போலியான பகட்டு வாழ்க்கை எமக்கு வேண்டாம் நாங்கள் உங்களிடம் மன்றாட்டமாய் கேட்பதெல்லாம் மனது துவண்டு விடும் பொழுதுகளில் உனக்காக நான் இருக்கின்றேன் என்ற உங்கள் நம்பிக்கையை… உடல் நிலை சோர்ந்து எழுந்து நடக்க முடியாமல் இருக்கும் தருணங்களில் உங்களுடன் வாழ்வதற்காக மீண்டு வரவேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு உங்கள் காதலை… நாம் என்னதான் அடுக்கடுக்காய் புது உடைகள் போட்டு எம்மை அழகுபடுத்தி கொண்டாலும் உங்களின் வர்ணனைகள் இல்லாமல் அது முழுமை பெறுவதேயில்லை என்பது உங்களுக்கு தெரியுமா ….
ஏன் இன்று என்னுடன் பேசவில்லை என்ற எம் கேள்விகளுக்கு கொஞ்சம் busy என்று சொல்லி உங்களால் இயல்பாய் கடக்க முடிகின்றது ஆனால் ஆர்ப்பரிக்கும் எங்கள் மனங்களின் வேதனைகள் நீங்கள் அறிவீர்களா? நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகும் போதும் உங்களிடம் இருந்து கிடைக்கப்பெறாத குறுந்செய்திகளால் குறுகிப்போவது எங்களின் மனங்களும் தான் என்பது உங்களுக்கு தெரியுமா ???
games application இல் he is playing right now என்ற notification பார்த்து அந்த கேம் ஆக நான் பிறந்து இருக்கக்கூடாதா என்று ஏங்கி தவிக்கும் மனதிற்கு என்ன சொல்லி சமாதான படுத்துவேன் எங்களின் தனிமையை உங்களுக்கு விளங்கப்படுத்த முயற்சி செய்து செய்து துவண்டு போய் இனி உனக்கு நான் message பண்னவே மாட்டேன் என்று பொய் கோபம் காட்டி விட்டு இறுமாப்புடன் சென்றாலும் அடுத்த கணமே உங்கள் குறுஞ்செய்திக்காக காத்திருக்கும் எங்கள் இயலாமையை நீங்கள் உணர்வீர்களா??? அந்த அரைநொடி நேரத்துக்குள் உலகில் உலா அத்தனை சுவாமிகளையும் மன்றாடி தோற்றுப்போய் அடுத்த என்ன செய்வது என்ற பித்து நிலையை நீங்கள் கனவிலும் அனுபவித்துருக்க மாட்டிர்கள்..
. எமது வலிகள் வார்த்தைகளால் வர்ணிக்கப்பட்ட முடியாதவை… அதை வார்த்தைகளால் செதுக்கி குறுந்செய்தி வடிவில் அனுப்பிவிட்டு ஒவ்வொரு வினாடியும் உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் எங்களுக்கு இறுதியில் கிடைப்பது message seen என்ற பதில் மட்டும் தான்… இத்தனையும் தாண்டி நாம் உங்களிடம் திருப்பி திருப்பி வருவதற்கு காரணம் காதலையும் தாண்டி உங்களை விட்டு கொடுக்க முடியாத எங்களின் கோழைத்தனம் தனம் தான்… எங்கள் மூச்சு காற்றுடன் கலந்து இருக்கும் உங்களின் நினைவுகளை எப்படி எங்களிடம் இருந்து பிரிப்பது…. எங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாட சொல்லவில்லை…எங்கள் உணர்வுகளையும் சற்று மதியுங்கள் என்று தான் சொல்கின்றோம். .
1000 முறை நாம் உடைந்து விழும் சில சந்தர்பங்கள் தன்னும் நீ என்னையும் மீறி என்னை கட்டுப்படுத்தும் சக்தி நீ தான் என்று நான் உணர்ந்த போதும் என் வலிகளுக்கு பின்னேயும் என் தேடல் நீ மட்டும் தான் என்று நான் உறுதி செய்து கொண்ட பொது உறுதியாய் இறுதியாய் என்னவன் நீ தான் என்று முடிவு எடுத்து நீ தரும் சோகங்கங்களையும் சுகமாய் எடுக்க பழகி எங்கள் கண்ணீரையும் தாண்டி உங்கள் புன்னகைக்காய் புன்னகைத்து கடக்கின்றோம்…என்றோ ஒருநாள் எங்கள் வலிகளை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்
-Niruba Gunendren-



