உயிரை ஊடறுத்து கனவுகளை கொள்ளை கொண்ட அழகுப்பதுமையே முகில் நடுவில் வீசும் சூரிய கீற்று போல் உன் புருவத்தால் என் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே நெஞ்சுக்குள்ள நிக்குற காதலியே கயல் மீன் போன்ற கண்களை உடையவளே கருவினில் சுமந்த தாயின் அன்புக்கு உன் அன்பு என்றும் நிகர் தானே குழி விழுந்த கன்னத்தால் என்னை குழியினுள் தள்ளியவள் நீ தானே வா அன்பே பறவைகளை கூட பொறாமை படும்படி சிறகடித்து வானில் பறக்கலாம் இனி வரும் காலத்தில்



