சமையல் குறிப்புகள்புதியவை

உடல் சூட்டை தணிக்கும் கற்றாழை மோர்

வெயில் காலத்தில் வயிற்று கோளாறு, உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள் கற்றாழை மோர் பருகலாம். இன்று இந்த மோரை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

புளிக்காத தயிர் – அரை கப்
கற்றாழை – 4 சிறு துண்டுகள்
இஞ்சி – சிறு துண்டு
பெருங்காய தூள் – சிறிதளவு
கொத்தமல்லித் தழை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கற்றாழைத்துண்டுகளை நீரில் பத்து முறை நன்கு கழுவ வேண்டும். இல்லையென்றால் கசக்கும்.

மிக்ஸியில் இஞ்சித்துண்டை தூளாக்கிய பின் கற்றாழைத்துண்டுகளை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் தயிர், பெருங்காய தூள், தேவையான அளவு உப்பும் சேர்த்து அரைத்து அதில் பின்னர் இரண்டு டம்ளர் நீர் சேர்த்து ஒரு சுற்று சுற்றி நிறுத்தவும். (தயிர் அரைத்த பின் கற்றாழைப் போட்டால் கற்றாழை நன்றாக அரையாது).

இதனை டம்ளரில் ஊற்றி அதில் கொத்துமல்லித் தழை போட்டு பருகவும்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker