டிரென்டிங்

சொந்தக்காரங்க முன்னாடி முதலிரவு நடந்தால்தான் திருமணம் செல்லுமாம்…தலைசுற்ற வைக்கும் முதலிரவு ரூல்ஸ்

திருமணமான தம்பதிகள் தங்கள் இல்லற வாழ்க்கையை தொடங்கும் சுப நிகழ்வுதான் முதல் இரவு அல்லது சாந்தி முகூர்த்தம் என்று நமது நாட்டில் அழைக்கப்படுகிறது. சாதாரணநிகழ்வாக அமைய வேண்டிய இதற்கு நல்ல நேரம் பார்ப்பது, கட்டிலை அலங்கரிப்பது, பால் கொடுத்து மணப்பெண் காலில் விழ வேண்டுமென்பது போன்ற தேவையில்லாத பல சடங்குகள் நமது நாட்டில் இருக்கிறது.

இந்த சடங்குகள் உங்களுக்கு எரிச்சலை உண்டாக்கலாம், முட்டாள்தனமானது என்று உங்களை சிந்திக்க வைக்கலாம். ஆனால் மற்ற நாடுகளின் முதல் இரவு சடங்குகள் பற்றி உங்களுக்கு தெரிந்தால் நல்லவேளை நாம் தப்பித்துக் கொண்டோம் என்று நிம்மதிதான் உங்களுக்கு வரும். ஏனெனில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அவ்வளவு வித்தியாசமான மற்றும் முகம் சுளிக்க வைக்கும் முதல் இரவு சடங்குகள் உள்ளன. இந்த பதிவில் சில நாடுகளில் இருக்கும் மோசமான முதல் இரவு சடங்குகளை பற்றி பார்க்கலாம்.

நாவ் டாங்பாங்

நாவ் டாங்பாங்

விசித்திரமான இந்த முதல் இரவு சடங்கு சீனாவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது மற்றவர்களுக்கு பொழுதுபோக்காகவும் தம்பதிகளுக்கு சங்கடமாகவும் இருக்கும் சடங்காகும். இந்த சடங்கில் உறவினர்கள் A ஜோக்குகளை கூறுவார்கள், பல சிற்றின்ப விளையாட்டுகள் நடத்தப்படும். அதில் ஒன்று தம்பதிகள் இருவரும் கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்ட ஆப்பிளை கடிக்க வேண்டும், அவர்கள் கடிக்க வரும்போது அந்த ஆப்பிள் மேல்நோக்கி இழுக்கப்படும். இறுதியில் தம்பதிகள் முத்தமிடும் சூழல் ஏற்படும்.

 சீஸ் பாரம்பரியம்

சீஸ் பாரம்பரியம்

இந்த விசித்திரமான முதல் இரவு சடங்கு ஸ்காட்லாந்தில் பின்பற்றப்படுகிறது. புதுமண தம்பதிகளுக்கு அசௌகரியத்தையும், தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தும் திருமண சடங்கு இது. தம்பதியினரின் உறவினர்கள் அவர்கள் முதல் இரவு கொண்டாட வேண்டிய படுக்கையில் பாலாடைக்கட்டிகளை பரப்பி வைத்துவிடுவார்கள். தம்பதியினர் கலவிக்கு முன் முன்விளையாட்டுகளுக்கும் கலவியின் போதும் இந்த பாலடைக்கட்டிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 படுக்கை சடங்கு

படுக்கை சடங்கு

இந்த சடங்கு வட ஐரோப்பிய நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது ஒரு வினோதமான திருமண இரவு சடங்கு, அங்கு ஒரு மதத் தலைவர் வந்து புதிதாக திருமணமான தம்பதியினரின் படுக்கையை புனிதப்படுத்துவார் இதோடு சடங்கு முடிந்து விட்டது என்று நினைத்தால் அது தவறு, சடங்கின் முக்கியப்பகுதியே இதற்கு மேல்தான். பின்னர் தம்பதியினர் உறவினர்களுக்கு முன்னால் பாலியல் செயல்களில் ஈடுபட வேண்டியிருக்கும், இதனால் திருமணம் முழுமையடைந்தது என்பதற்கு சாட்சியம் அளிக்க முடியும்.

மோசமான சூப்

மோசமான சூப்

இந்த மோசமான சடங்கு பிரான்சில் கடைபிடிக்கப்டுகிறது. சில பிரெஞ்சு சமூகங்களிடையே ஒரு அருவருப்பான திருமண இரவு பாரம்பரியம் உள்ளது, அங்கு புதுமணத் தம்பதியினர் இரவு முழுவதும் சூப் குடிக்க வைக்கப்படுகிறார்கள். இந்த சூப் கழிவறை வடிவ கிண்ணத்தில் வழங்கபடுகிறது, மேலும் அதில் சேர்க்கப்படும் பொருட்களும் அருவறுப்பானவையாக உள்ளது. இதில் மீதமான உணவுகள் மற்றும் உறவினர்கள் அருந்திய மதுவின் மிச்சம் ஆகியவையும் சேர்க்கப்படுகிறது.

சத்தமான இரவுகள்

சத்தமான இரவுகள்

இந்த வினோத சடங்கு கனடா மற்றும் தென்கொரியாவில் நடைமுறையில் உள்ளது. கனடியர்களிடையே ஒரு வேடிக்கையான பாரம்பரியம் உள்ளது, அங்கு விருந்தினர் ஒரு இசைக்குழுவை இரவு முழுவதும் உரத்த இசையை இசைக்கிறார்கள், இதனால் தம்பதியினர் தூங்கக்கூடாது, விழித்திருக்கவும், விரக்தியால் தங்கள் நெருக்கத்தை அதிகரிக்கவும் செய்கிறார்கள். சிலர் பாத்திரங்கள் மற்றும் உணவுகள் மூலம் கதவை இடிக்கிறார்கள்.

மூத்தவர்களின் தலையீடு

மூத்தவர்களின் தலையீடு

இந்த வினோத சடங்கு ஆப்பிரிக்காவில் உள்ளது. ஆப்பிரிக்காவில் சில சமூகங்களில், தம்பதியினருடன் முதல் இரவு அறையில் வயதான மற்றும் அனுபவமிக்க ஒருவர் தங்கவைக்கப்படுகிறார். பாலியல் நெருக்கத்தின் புதிய நுட்பங்களை அவர் கற்றுக் கொள்ளச் செய்கிறார், சிலசமயம் கலவியில் தன்னை ஈடுபடுத்துவதன் மூலம் அவற்றைக் காண்பிப்பார்.

மீன் இரவு

மீன் இரவு இந்த சடங்கு

கொரியாவில் உள்ளது. கொரியாவில், மணமகனை இறந்த மீனால் அடிக்கும் மரபு உள்ளது. இது மணமகனின் நம்பிக்கையை அதிகரிக்கவும், இரவு முழுவதும் ஆற்றலுடன் இருக்கவும் செய்யப்படுகிறது. அவர்கள் காலில் தாக்கப்படுகிறார்கள், இது அவர்களை மிகவும் புண்படுத்தும். அதேசமயம் மணமகளுக்கு அதிகபட்ச இன்பத்தை வழங்க நண்பர்கள் மணமகனுக்கு அறிவுரைகளை வழங்குவார்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker