சமையல் குறிப்புகள்

கேழ்வரகு அவல் உப்புமா

தேவையான பொருட்கள் :

  • கேழ்வரகு அவல் – ஒரு கப்
  • வெங்காயம் – ஒன்று
  • கடுகு – அரை டீஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 2
  • பெருங்காயத்தூள் – சிறிதளவு
  • மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
  • கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு
  • எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு




செய்முறை:

  • கேழ்வரகு அவலை நன்றாக கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும்.
  • வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து, வதங்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேழ்வரகு அவலை சேர்க்கவும்.
  • இதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி 10 நிமிடம் மூடி வைக்கவும். அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும். பிறகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.
  • சூப்பரான சத்தான கேழ்வரகு அவல் உப்புமா ரெடி.





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker