உறவுகள்புதியவை

தம்பதியருக்குள் சண்டை வரும் போது மறக்கக்கூடாதவை

‘அதிகம் விவாதிக்கிற, சண்டை போட்டுக் கொள்கிற தம்பதிகளே ஒருவருக்கொருவர் அதீத அன்புடன் இருக்கிறார்கள்’ என்கிறார்கள்.

 

 

 

 

 

பிடிக்காத ஒருவர் எப்படியோ போகட்டும் என்று விட்டுவிடுவதும், பிடித்த ஒருவர் இப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்புவதும்தான் தம்பதிகளின் சண்டைக்கு முக்கிய காரணம். கருத்து வேறுபாடு இல்லாத காதலர்களே / தம்பதிகளே கிடையாது. அந்த கருத்து வேறுபாட்டை இருவரும் எப்படி கையாள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த உறவு தித்திக்கிறது.

அதனால், சண்டையில்லாத உறவு சாத்தியம் இல்லை. ஆனால், சண்டை வரும்போது இந்த 6 விஷயங்களை மட்டும் மறக்காமல் பின்பற்றுங்கள்.

 

 

 

 

1. தன்னுடைய கருத்தை மற்றவரின்மேல் திணிக்கக் கூடாது.
2. பார்ட்னர் முக்கிய விஷயத்தை விவாதித்துக் கொண்டிருக்கும்போது அதை திசை திருப்பவோ, புறக்கணிக்கவோ கூடாது.
3. அடுத்தவர் பேசுவதையும் கவனியுங்கள்.

4. மற்றவர் நலன் சார்ந்ததாகவே உங்கள் முடிவுகள் இருக்கட்டும்.
5. கடுமையான வார்த்தைகள் கூடவே கூடாது.
6. விட்டுக் கொடுப்பதன் மூலம் உறவைப் பாதுகாக்க முடியும்.‘ஊடுதல் காமத்திற்கு இன்பம்’ என்று வள்ளுவர் சொன்னது சரிதான்!

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker