அழகு..அழகு..

முகப்பருவை நிரந்தரமான போக்கும் இயற்கை சிகிச்சைகள்

சரும துளைகளில் இறந்த செல்கள் அடைத்துக்கொண்டால், வரக்கூடிய பிரச்சனை முகப்பரு. முகப்பருவை போக்கும் இயற்கையான தீர்வுகள், தடுக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.

சரும துளைகளில் இறந்த செல்கள் அடைத்துக்கொண்டால், வரக்கூடிய பிரச்சனை முகப்பரு. அழுக்கு, தூசு, எண்ணெய் பசை ஆகியவை சரும துளைகளில் அடைத்துக்கொண்டால் முகப்பரு வரும். இது மரபியலாக வரும் பிரச்சனையல்ல.

முகப்பரு உள்ளவர், ஜெல் வகை கிரீம்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். துரித உணவுகள், சாக்லேட், கேக், பிஸ்கெட் சாப்பிட்டால் முகப்பரு வரும்.

அடிக்கடி முகத்தில் கைவைத்துக்கொண்டே இருந்தாலும் பருக்கள் அதிகமாக வரும். பரவவும் செய்யும். ஒரு நாளைக்கு 2-3 முறை மிதமான ஃபேஸ் வாஷ் அல்லது ஃபேஸ் வாஷ் பவுடரால் முகத்தைக் கழுவுங்கள்.

தலையில் பொடுகு, தலைமுடி சுத்தமில்லாமல் இருந்தாலும் பரு வரும். வாரம் 3-4 முறையாவது மிதமான ஷாம்பு போட்டு தலைமுடி சுத்தப்படுத்துங்கள். முகத்துக்கு மட்டும் தனியாக துண்டு அல்லது டிஷ்ஷூ பயன்படுத்தலாம். தலை துவட்டும் துண்டிலே முகத்தைத் துடைக்க கூடாது.

* கடையில் ஈஸ்டை வாங்குங்கள். ரோஸ் வாட்டரில் ஈஸ்ட் போட்டு 20 நிமிடம் ஊற வையுங்கள். பேஸ்டாக வரும். பேஸ்ட் பக்குவத்தில் இல்லையெனில் கொஞ்சமாக ரோஸ் வாட்டர் கூட சேர்க்கலாம். இதை முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். 15 நாட்களுக்கு ஒருமுறை செய்யுங்கள். வந்த பரு நீங்கும். இனி பருவோ ஆக்னியோ வராது.

* துளசி இலை பவுடர் ஒரு ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் ஒரு சிட்டிகை, முல்தானிமிட்டி ஒரு ஸ்பூன் நன்றாக கலந்து  அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பேக்காக போட்டு 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

* வேப்பிலை பவுடரை ரோஸ் வாட்டர் கலந்து குழைத்துக் கொள்ளுங்கள். இரவில் முகம் முழுவதும் பூசிய பிறகு, படுத்து உறங்கி மறுநாள் கழுவி விடலாம். முகப்பரு குறைந்து இருப்பது தெரியும்.

* பட்டைத்தூளை தேன் கலந்து குழைத்துக் கொள்ளவும். பரு உள்ள இடத்தில் மட்டும் தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம். 2 மாதம் தொடர்ந்து செய்யலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker