சமையல் குறிப்புகள்புதியவை

சூப்பரான காளான் பன்னீர் மசாலா

தேவையான பொருட்கள்

  • காளான் – 100 கிராம்
  • பன்னீர் – 100 கிராம்
  • வெங்காயம் – 2
  • தக்காளி – 2
  • இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 4
  • மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
  • சீரகத்தூள் – 1 ஸ்பூன்
  • கரம்மசாலாத்தூள் – 1 /2 ஸ்பூன்
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • கட்டித்தயிர் – 1 கப்
  • முந்திரிப்பருப்பு – 15
  • எண்ணெய்-தேவையான அளவு




அரைக்க

  • பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப்
  • நறுக்கிய தக்காளி – 1 1/2 கப்
  • முந்திரிப் பருப்பு – 10

செய்முறை

  • கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாகவும், பச்சை மிளகாயை நீளமாகவும் அரிந்து கொள்ளவும்.
  • காளான்களை நன்கு கழுவி நறுக்கவும்.
  • பன்னீரை துண்டுகளாக்கவும்.
  • ஒரு பெரிய கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் முந்திரிப் பருப்பு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது இவற்றைப் போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
  • பின்பு தக்காளியையும், காளான்களையும் சேர்த்து சில நிமிடங்கள் கிளறிவிடவும்.
  • தக்காளி குழைய வதங்கியதும இத்துடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வதக்கவும்.
  • இதனுடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, உப்பு, சேர்த்து கலக்கவும்.
  • அடுத்து அதில் கட்டித் தயிரை கடைந்து அதில் ஊற்றி, எண்ணெய் தனியே பிரிந்து வரும்வரை வதக்கவும்.
  • கடைசியாக பன்னீர் கட்டிகளை மெதுவாக அதில் போட்டு மேலும் இரண்டு நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
  • காளான் பன்னீர் மசாலா மனக்க மனக்க சுவைக்க ரெடி…





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker